Untitled Document | 1754 | | அன்பு செய்யின் அயலாரும் அண்டி நெருங்கும் உறவினராம்; அன்பு நீங்கின் உறவினரும் அகன்று நிற்கும் அயலாராம்; துன்ப நோயை நீக்கிடுமேல் துவ்வா விடமும் அமுதாகும்; துன்ப நோயை ஆக்கிடுமேல் தூய அமுதும் விடமாமே. | 85 |
| 1755 | | யாத சொன்னாய்? இன்னமுதம் ஏந்தி உண்ட கலமதனை மோதி உடைக்கும் அறிவில்லா மூடன் எங்கும் உண்டுகொலோ? ஓதற் கரிய பேரருளால் உவந்து கண்ட உருவமதைத் தீதென் றெண்ணிச் சினம்பெருகிச் சிதைக்கத் தெய்வம் துணிந்திடுமோ? | 86 |
| 1756 | | மறந்த துள்ளம் பிறந்ததென வசந்த காலம் வந்ததிதோ; சிறந்த மலர்கள் மலர்ந்துமரம் தெய்வ மணமே கமழ்ந்திடுமால்; இறந்த புல்லும் இருநிலமீது எழுந்து கொழுந்து விட்டிடுமால்; துறந்த ஞானி தனிமையிடம் துருவிச் செல்வது ஏன்? ஐயா! | 87 |
| 1757 | | குழியுங் குண்டும் அடர்ந்திடும்இக் குவல யத்தில் யான் செல்லும் வழியும் செம்மை வழியேயாம்; மற்றவ் வழியை நோக்கிடும்உன் விழியின் வளைவே வளைவெல்லாம்; விரைந்தவ் வளைவை நீக்கிஎனைப் பழிவெம் பாவம் அணுகாமல் பாது காப்பாய் போதகனே! | 88 | |
|
|