பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு383

Untitled Document
1758 மோசக்காரன் பொன்னன் அப்பா!
     முத்தம்மாள் ஓர்வேசி, அப்பா!
ஆசை காட்டி இழுத்துன்னை
     ஆழக் குழியில் வீழ்த்திடுவார்;
‘பாசம்’ ‘நேசம்’ என்பதெலாம்
     பாசாங் கன்றி வேறில்லை;
ஈசன் அடியை மறவாமல்
     என்றும் ஏத்தி வாழ்வாயே.
89

1759 ஆவித் துணையே! அருட்கடலே!
     அருளால் அருள்செய் ஆண்டவனே!
பாவி எனக்குன் அருள்நோக்கம்
     பாலித் திடுதல் ஆகாதோ?
மேவும் அரிய புண்ணியமாம்
     விலைகொண் டதனை விற்பாயேல்,
யாவர் உய்வர்? இவ்வுலகில்
     ஏழை மக்கள் என்செய்வார்?
90

1760 நாடும் ஈசன் பாவிகளை
     நரகில் வீழ்த்தி விடுவானென்று
ஏடு நிறையப் பண்டிதர்கள்
     எழுதி வைத்துப் போய்விட்டார்;
ஈடி லாத அவனருளை
     என்றும் அன்பால் உள்ளுருகி
ஆடிப் பாடும் அடியாரால்
     அயலார் அறிய வல்லாரோ?
91

1761 வைய மிசையுன் னடிபற்றி
     வாழும் அடியார் தனையேநீ
உய்ய வைத்தல் செய்வேலைக்கு
     உதவு கூலியாம்; எவரும்
செய்யொ ணாத பழிபாவம்
     செய்த பொல்லா நீசரையும்
ஐய மின்றி ஆளுதலே
     அருளாம்; எங்கள் பெருமானே!
92