Untitled Document | 1762 | | தண்ணார் மதியும் புரிசடையும் தாங்கும் தையல் பாகனென எண்ணா தொருவன் சொன்னது கேட்டு எவனோ சொன்னான்; அவனைக் கேட்டு அண்ணா சொன்னான்; அதுபோலின்று அடுத்த தம்பி சொல்கின்றான்; கண்ணால் ஈசன் திருமேனி கண்டார் எவரும் உண்டோ? சொல். | 93 |
| 1763 | | நாடும் தெய்வம் இதுவென்று ஞாலத் தறிய முயல்கின்றார், தேடித் தேடிப் பார்த்ததெலாம் திரைமேல் வந்த திரையாகும்; வாடி வாடி நோற்றதெலாம் வாணாள் வீணாள் ஆனதுவே; பாடிப் பாடிப் பெற்றதெலாம் பகலிற் கனவு கண்டதுவே. | 94 |
1764 | | எங்கும் மனிதர் உனைத்தேடி இரவும் பகலும் அலைகின்றார்; எங்கும் உள்ளது உன்வடிவாம்; எனினும் குருடர் காண்பாரோ? எங்கும் எழுவது உன்குரலாம்; எனினும் செவிடர் கேட்பாரோ? எங்கும் என்றும் எவ்வுயிரும் யாவு மான இறைவனே | 95 |
| 1765 | | ஆல யங்கள் ஏனய்யா! அபிஷே கங்கள் ஏனய்யா! கோலங் கொடிகள் ஏனய்யா! கொட்டு முழக்கம் ஏனய்யா! பாலும் பழமும் வைத்துநிதம் பணிந்து நிற்ப தேனய்யா! சீலம் பேணும் உள்ளத்தைத் தெய்வம் தேடி வாராதோ? | 96 |
|
|
|