| முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 385 |
Untitled Document | 1766 | | என்னை நோக்கி எதிர்வந்தான், யானும் நிலனை நோக்கிநின்றேன்; என்னை முத்த மிடவந்தான், யானும் நழுவ வழிபார்த்தேன்; இன்னும் நிற்பான் என்றிருந்தேன்; இமைப்பின் ஓடி மறைந்திட்டான்; இன்னும் தேடி அலைகின்றேன்; எங்கும் காணேன்; என்செய்வேன்? | 97 |
| 1767 | | ஏது ஏது மில்லாமல் என்னைத் தனியே வைத்தாய்நீ; தூதின் வரவு காணாமல் தூண்டிற் புழுவாய்த் துடிக்கின்றேன்; நீதி இதுவோ? நெறியிதுவோ? நீசெய் குறையை நிறைசெய்ய ஓது வாழ்நாள் நீண்டிடுமோ? உள்ளம் இதனை உணராதோ? | 98 |
| 1768 | | என்றும் என்றும் என்குறைகள் இரவும் பகலும் ஆராய்வேன்; அன்றி அயலார் குறைகாணில் அடைத்துக் கண்ணை மூடிடுவேன்; இன்றிவ் உலகின் கொடுமையெலாம் இதயம் பிறவு செய்திடுமால்; ஒன்றி யிங்கு வாழ்வதிலும் ஓடி ஒழிதல் நலமாமே. | 99 |
| 1769 | | எண்ணி எண்ணி என்குறைகள் ஏனோ நிதமும் கூறிடுவர்? பண்ணுஞ் செயல்கள் பழித்திடுவர்; பாவி என்றுந் தூற்றிடுவர் மண்ணில் யானோர் ஒளிவட்டம்; மற்றவ் வட்டம் நோக்கிடுவோர் கண்ணிற் காண்பது அவரவர்தம் காட்சி யல்லால் வேறாமோ? | 100 | |
|
|