Untitled Document | 1770 | | ‘சின்னஞ் சிறியன், மதுவுண்டு திரியும் லோலன்’ என்றுள்ளம் கன்னக் கன்னப் பேசிஎனைக் கலங்கச் செய்வர் கருணையிலார்; அன்னை! அப்பா! நின்கோயில் அடிமை யாக அணுகியபின், என்னை யானும் அறிவேனோ? யான்செய் கருமம் எனதேயோ? | 101 |
| 1771 | | உன்னை உள்ளின் என்னுளத்தே ஊக்கம் பெருகும் ஐயமில்லை; உன்னை யல்லால் ஒருவரையிவ் உலகில் நோக்கும் ஆசையிலேன்; உன்னை நோக்கி என்முகமங்கு ஒளிரக் கண்டு மகிழ்ந்திடுவேன்; என்னை நோக்கி என்னுள்நீ இருத்தல் கண்டு வாழ்த்திடுவேன். | 102 |
| 1772 | | நண்ணும் உயிருக் குயிர்நீயாம்; நாடும் அன்பு நீயேயாம்; கண்ணுள் மணியும் நீயேயாம்; கருத்துள் ஒளியும் நீயேயாம்; பண்ணின் சுவையும் நீயேயாம்; பாவின் நயமும் நீயேயாம் எண்ணின் நீயல் லாதபொருள் யாரும் உண்டோ இவ்வுலகில்? | 103 |
| 1773 | | ஓதும் வேதம் ஒன்றுமில்லை; உருட்டும் மணிதாழ் வடமில்லை; ஆதி கோயில் தேடிநிதம் அங்கும் இங்கும் அலைவதில்லை; சாதி இல்லை மதமில்லை; தாரணி மீதோர் ஆசையில்லை; யாதும் கவலை இல்லை; எனக்கு யாரே நிகராம் இவ்வுலகில்; | 104 | |
|
|