| முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 387 |
Untitled Document | 1774 | | படுவெம் பாலை ஒருபுறமும் பயிர்வாழ் நன்செய் ஒருபுறமும் நடுவண் ஒடுங்கி ஓடுமொரு நந்த வனமும், அவ்வனத்தில் அடிமை அரசர் இவரில்லாது அமையும் அரிய நல்வாழ்வும், உடைமை யாகப் பெறுவேனேல், உம்பர் நாடும் வேண்டேனே. | 105 |
| 1775 | | வெய்யிற் கேற்ற நிழலுண்டு; வீசும் தென்றல் காற்றுண்டு; கையில் கம்பன் கவியுண்டு; கலசம் நிறைய மதுவுண்டு; தெய்வ கீதம் பலவுண்டு; தெரிந்து பாட நீயுமுண்டு வையந் தருமிவ் வனமன்றி வாழும் சொர்க்கம் வேறுண்டோ? | 106 |
| 1776 | | பொல்லான் என்பர்; அதனாலென்? புனிதன் என்பர்; அதனாலென்? கல்லன் என்பர்; அதனாலென்? கலைஞன் என்பர்; அதனாலென்? சொல்லா வசைகள் சொன்னாலென்? சூழ்ந்து நின்று புகழ்ந்தாலென்? எல்லா நாளும் ஒருநாள்போல் இருக்க வேண்டும் என்மனமே. | 107 |
| 1777 | | ‘புயலே யனைய கொடையாளர், புவன மடங்காப் புகழடையார், இயலும் கல்விக் கிணையில்லார்’ எனவே தத்தம் முன்னோரின் செயலும் குணமும் சிறப்பும் அனு தினமும் மிகவே போற்றிடுவீர்; வயலைப் பயிர்செய் யாதுபழ வைக்கோல் கிண்டிப் பயன்எதுவோ? | 108 | |
|
|