Untitled Document | 1778 | | துயரம் அடர்ந்து வளர்ந்துன்னைச் சுற்றி வளையும் வேளையிலே, முயலும் முயற்சி யின்றி, ஒரு மூலை தேடி இருப்பதும்ஏன்? அயலி லுள்ளார் படும்பாடு, அழுகண் ணீரும் கண்டு, உனது மயலை முற்றும் மாற்றுவையே; மனத்தை நன்றாய்த் தேற்றுவையே. | 109 |
| 1779 | | கண்ணும் உடைமை யாவையும்நீ நாசஞ் செய்து நாடுவையேல், உண்மை யாக உன்னையுமே உணர்ந்து கொள்வாய், ஐயமிலை; மண்ணின் ஆசை நீங்கின், அருள் வள்ளல் ஆசை ஓங்கிவரும்; எண்ணும் உள்ளத்து ஆசையிரண்டு இருக்க இடமும் உண்டோடா? | 110 |
| 1780 | | உருளும் உலகில் ஒருநாளும் ஒன்றும் நிலையில் நிற்பதில்லை; மருளும் மனிதர் வாழ்க்கைஒரே வழியிற் செல்வ துண்டோ? சொல் பொருளை நோக்கிப் புகழ்விடுவார்; புகழை நோக்கிப் பொருள்விடுவார்; அருளை நோக்கி இவைவிடுவார் அரியர், என்றம் அரியர், அம்மா! | 111 |
| 1781 | | ஆழி சூழும் உலகாளும் அரச னாக வேண்டுமெனில், வாழும் வாழ்வில் உன்னையும்நீ மறந்து வாழ வேண்டுமடா! ஏழை யாகி எளியவரின் எளிய னாக வேண்டுமடா! தோழ னாகி யாவர்க்கும் தொண்ட னாக வேண்டுமடா! | 112 | |
|
|