Untitled Document
259 | | இடைவிடாது தபால் - உலகில் எங்கும் கொண்டு செல்வேன்; சடைவி லாமலே - பலரைத் தாங்கியும் போவேன். |
260 | | நன்மை செய்யவந்தேன் - அதை நன்குண ராமல், வன்மைப் போரில்எனை - இபத்து மாட்டி விட்டார், ஐயோ! |
261 | | தீவினை செய்ய - என்னைத் தினமும் ஏவுகிறார்; பூவிலக மெல்லாம் - சுட்டுப் பொசுக்கச் சொல்கிறார்; |
262 | | அன்பைக் கொன்றுவிட்டார்; - மனிதர் அரக்கர் ஆகிவிட்டார்; துன்பம் செய்திடவே - இன்று துணிந் திறங்கிவிட்டார். |
263 | | ஆசைப் பேயெங்கும் - தலைவிரித்து ஆடு கின்றதையோ! நாச காலம்ஐயோ - புவியும் நரக மாகுதையோ! |
264 | | காட்டில் ஓநாயும் - நரியும் கடுவா யும்புலியும் நாட்டு நாகரிகம் - கண்டு நகைக்க லாச்சுதையோ |
265 | | சாந்த மூர்த்தியின் - அகிம்சா தருமம் மேற்கொண்டு மாந்தர் இவ்வுலகில் - நன்றாய் வாழ்வ தெந்நாளோ? | |
|
|