பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு43

Untitled Document
39. பாண்டியாடுதல்

266   பாங்கி தோழி பங்கஜம்
     பாண்டி யாட வாராயோ?
பாட்டி எனக்குப் பரிசளித்த
     பல்லாங் குழியைப் பாரிதோ!

267   மாமா நேற்று வாங்கித்தந்த
     மாணிக் கத்தைப் பாரிதோ!
அத்தை தந்த கட்டிமுத்தின்
     அழகை வந்து பாரிதோ!

268   சேரருக்கு மங்களங்கள்
     செப்பி விளை யாடலாம்;
சோழருக்குச் சோபனங்கள்
     சொல்லி விளை யாடலாம்.

269   பாண்டியர்க்குப் பல்லாண்டு
     பாடி விளை யாடலாம்;
உண்ணும் பாண்டி யாடலாம்;
     ஓய்ந்து விட்டால் நிறுத்தலாம்.

270   கட்டும் பாண்டி யாடலாம்;
     களைத்துவிட்டால் நிறுத்தலாம்;
எய்யாப் பாண்டி யாடலாம்;
     எய்த்துவிட்டால் நிறுத்தலாம்.

271   பசும் பாண்டி யாடலாம்;
     பசித்தவுடன் நிறுத்தலாம்;
பாங்கி தோழி பங்கஜம்!
     பாண்டியாட வாராயோ?

40. இயற்கை

272 வானம் கறுத்தால் மழை பெய்யும்,
மழை பெய்தால் மண் குளிரும்;
மண் குளிர்ந்தால் புல் தழைக்கும்,
புல் தழைத்தால் பசு மேயும்;