முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 43 |
Untitled Document
266 | | பாங்கி தோழி பங்கஜம் பாண்டி யாட வாராயோ? பாட்டி எனக்குப் பரிசளித்த பல்லாங் குழியைப் பாரிதோ! |
267 | | மாமா நேற்று வாங்கித்தந்த மாணிக் கத்தைப் பாரிதோ! அத்தை தந்த கட்டிமுத்தின் அழகை வந்து பாரிதோ! |
268 | | சேரருக்கு மங்களங்கள் செப்பி விளை யாடலாம்; சோழருக்குச் சோபனங்கள் சொல்லி விளை யாடலாம். |
269 | | பாண்டியர்க்குப் பல்லாண்டு பாடி விளை யாடலாம்; உண்ணும் பாண்டி யாடலாம்; ஓய்ந்து விட்டால் நிறுத்தலாம். |
270 | | கட்டும் பாண்டி யாடலாம்; களைத்துவிட்டால் நிறுத்தலாம்; எய்யாப் பாண்டி யாடலாம்; எய்த்துவிட்டால் நிறுத்தலாம். |
271 | | பசும் பாண்டி யாடலாம்; பசித்தவுடன் நிறுத்தலாம்; பாங்கி தோழி பங்கஜம்! பாண்டியாட வாராயோ? |
272 | | வானம் கறுத்தால் மழை பெய்யும், மழை பெய்தால் மண் குளிரும்; மண் குளிர்ந்தால் புல் தழைக்கும், புல் தழைத்தால் பசு மேயும்; | |
|
|