பக்கம் எண் :

420கவிமணியின் கவிதைகள்

Untitled Document
சரணம்
வேத புராதனியே! சரணம்!
     விஜய நாராயணியே! சரணம்!
ஆதி பராபரையே! சரணம்!
     அகிலாண்ட நாயகியே! சரணம்
மாதவன் தங்கையே! சரணம்!
     மங்கை மனோன்மணியே! சரணம்!
கோதையங் குழலியே! சரணம்!
     குமரிப் பகவதியே! சரணம்!
(ஒரு வரம்)
41. அஞ்சாதே
இராகம் - பைரவி            தாளம் - ஆதி
பல்லவி
1825 அஞ்சா திருப்பாயென் மனமே! - எமனையும்
     அஞ்சா திருப்பாயென் மனமே! 
அநுபல்லவி
பஞ்சா க்ஷரம் நினைந்து
     பால்வெண் ணீறும் பூசி
(அஞ்சா)
சரணம்
தீரா வினைகளெல்லாம் தீரும் - திருக்கயிலைத்
     தேவாதி தேவனருள் சேரும்;
பேரானந்தம் பெருகும்,
     பிறவிப் பிணியகலும்,
ஆராவ முதனைய
     அருந்தமிழ் மறை ஓதி
(அஞ்சா)(41)
42. மன்னித் தருள்வாய்
இராகம் - சாரங்க            தாளம் - ஆதி
பல்லவி
மன்னித் தருள்வா யம்மா! - என்பிழையெல்லாம்
     மன்னித் தருள்வா யம்மா!