| | சரணம் | |
| | வேத புராதனியே! சரணம்! விஜய நாராயணியே! சரணம்! ஆதி பராபரையே! சரணம்! அகிலாண்ட நாயகியே! சரணம் மாதவன் தங்கையே! சரணம்! மங்கை மனோன்மணியே! சரணம்! கோதையங் குழலியே! சரணம்! குமரிப் பகவதியே! சரணம்! | (ஒரு வரம்) |
| | 41. அஞ்சாதே | |
| | இராகம் - பைரவி தாளம் - ஆதி | |
| | பல்லவி | |
1825 | | அஞ்சா திருப்பாயென் மனமே! - எமனையும் அஞ்சா திருப்பாயென் மனமே! | |
| | அநுபல்லவி | |
| | பஞ்சா க்ஷரம் நினைந்து பால்வெண் ணீறும் பூசி | (அஞ்சா) |
| | சரணம் | |
| | தீரா வினைகளெல்லாம் தீரும் - திருக்கயிலைத் தேவாதி தேவனருள் சேரும்; பேரானந்தம் பெருகும், பிறவிப் பிணியகலும், ஆராவ முதனைய அருந்தமிழ் மறை ஓதி | (அஞ்சா)(41) |
| | 42. மன்னித் தருள்வாய் | |
| | இராகம் - சாரங்க தாளம் - ஆதி | |
| | பல்லவி | |
| | மன்னித் தருள்வா யம்மா! - என்பிழையெல்லாம் மன்னித் தருள்வா யம்மா! | |