Untitled Document
இராகம் - ஸம்ஸ்த்வனி | | | தாளம் - ஆதி |
| | பல்லவி | | 1828 | | வந்தனை செய்வோமே! - மலரடி வாழ்த்தி வணங்கு வோமே! | | | | அநுபல்லவி | | | | சிந்தனை செய்யு முன்னம் வந்தெனக் கருள் செய்யும் தந்தி முகனைச் சிவ சங்கரன் மைந்தனை | (வந்தனை) |
| | இன்னமு தொழுகும் இசை - தமிழிசை இந்நிலத் தோங் கிடவே கன்னல் முக்கனி அவல்" கடலைமோ தகமெலாம் சந்நிதி முன்படைத்துத் தாழ்ந்து தலைகுனிந்து | (வந்தனை) |
இராகம் - ஸௌராஷ்ட்ரம் | | | தாளம் - ஆதி |
1829 | | கங்கையும் வெண்பிறை யுஞ்சடை சூடிய கண்ணுதல் நீயேயாம்; சங்கமும் ஆழியும் அங்கையில் ஏந்திய தண்முகில் நீயேயாம்; மங்கல மாமறை ஓதி மகிழ்ந்திடும் மலரவன் நீயேயாம்; ஐங்கர னே! எமை ஆண்டருள் ஐயனே! ஆதி விநாயகனே! | | |
|
|