பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு437

Untitled Document
66. கண்டு தொழ வேண்டும்

இராகம் - காம்போதி     தாளம் - ஆதி

 

பல்லவி
1850 கண்டு தொழ வேண்டும்! - தில்லையில்
     கண்டு தொழ வேண்டும்!
அநுபல்லவி
அண்டங்க ளெல்லாம்
     அதிரநின் றாடிய
கண்டங் கரியானைக்
     கண்மூன் றுடையானைக்
சரணம்
பக்தி பெருகிடவே - கொடிய
     பாபம் கருகிடவே,
புத்தி சிறந்திடப்
     புண்ணியம் சேர்ந்திடச்
சத்தி வளர்ந்திடத்
     தாண்டவ ராயனைக்
(கண்டு)
67. ஆறணி வேணியன்

இராகம் - ஹம்ஸநாதம்     தாளம் - ஆதி

பல்லவி
1851 வேறெதும் வேண்டேனே! - கும்பிட்டு
     வேறெதும் வேண்டேனே!
அநுபல்லவி
  நீறணி மேனியள்
     நீலகண்டன் கங்கை
ஆறணி வேணியன்
     ஆனந்தனைக் காணில்
(வேறெ)