பக்கம் எண் :

468கவிமணியின் கவிதைகள்

Untitled Document
1195 - 1208 பண்டிதமணியின் கதிர்மணி விளக்கம்
     மகிபாலன் பட்டி     மகாமகோபாத்தியாய பண்டிதமணி கதிரேசன்
செட்டியாரின் (1953)  திருவாசகம், திருச்சதகத்தின் ‘கதிர்மணி விளக்கம்’
நூலில் வந்தவை.      (எழுதிய நாள் 30-6-1951) இத்துடன் ... “தாங்கள்
இப்பணியில்        ஈடுபட்டிருப்பது தமிழ்நாட்டின் பாக்கியமே ஆகும்.
இம்மாதிரியான         விளக்கவுரை எழுதுவதற்குத் தங்களைத் தவிர
வேறொருவர்       இக்காலத்தில் இல்லை என்பது என் உண்மையான
அபிப்பிராயம்” என்ற குறிப்பும் உள்ளது.

     இதே         கவிதைகள் ‘தொண்டன்’; ஆவணி 1951 இதழிலும்
வந்துள்ளன.

1209 புதுமைப்பித்தன் மலர்


     நாகர்கோவிலில், எழுத்தாளர் சுந்தர ராமசாமி வெளியிட்ட‘புதுமைப்
பித்தன் (1906-1942) மலரில்’ வந்தது. (1952)

1210-1216 மலரும் உள்ளம்

     அழ வள்ளியப்பாவின்     குழந்தைப் பாடல்கள் தொகுப்பு (1953)
1217 - 1219 கம்பர்       தரும் ராமாயாணம் டி.கே.சி.யின் ‘கம்பர் தரும்
இராமாயணம்’ (பால காண்டம், அயோத்தி காண்டம் - இரண்டாம் பதிப்பு) குற்றாலம் சேது மாளிகையில் இராஜாஜி தலைமையில் 1953 அக். 31ஆம்
தேதி வெளியிடப்பட்டது. இதற்காகக் கவிமணி பாடிய பாடல்கள் இவை.

1220 - 1224 குன்றக்குடி அடிகளார்

     எம்.எஸ்.பி. சண்முகம்      எம்.எ என்பவர் எழுதிய ‘குன்றக்குடி
அடிகளின்            வரலாறு’ நூலுக்கு எழுதிய வாழ்த்துப்பாடல்கள்.
இப்பாடல்களை   எழுதிய போது கவிமணி  அறுவை சிகிச்சை முடிந்து
படுக்கையிலிருந்தார் (5-6-1954)

1125 இராமகாதை

     சோ.முருகப்பாவின்     ‘இராமகாதை பாலகாண்டம்; ’ (ஜனு 1954)
இக்கவிதைக்கு வேறு வடிவம் உண்டு. (கை.எ.பி) அது கீழ் வருமாறு

“யாவருமே போற்ற இராம காதையினை
    பாவினயம் ஆராய்ந்து பார்த்த ளித்தோன் - மேவுபுகழ்ச்
செந்தமிழ் வித்தகச் செல்வன் முருகப்பன்
    சந்ததமும் வாழ்க தழைத்து.