Untitled Document
303 | | புள்ளி மயிலோடு புனங்காத்து நிற்கும் அந்த வள்ளி மணவாளன் மதலையாய் வந்தானோ? |
304 | | ஆயர் பதியில் அற்புதங்கள் செய்து நின்ற மாயவனே இங்கெமக்கு மகவாகி வந்தானோ? |
305 | | நாலா யிரக் கவியின் நல்லமுதம் உண்டிட, மால் பாலாழி நீங்கியொரு பாலகனாய் வந்தானோ? |
306 | | பெண்கள் சிறுவீட்டைப் பேணா தழித்து, அவர்தம் கண்கள் சிவக்க வைக்கும் கண்ணபிரான் நீதானோ? |
307 | | ஆரடித்தார் நீ அழுதாய், அடித்தாரைச் சொல்லி அழு; சீரெடுத்த செல்வச் சீமான் திருக்குமரா! |
308 | | பாலை விரும்பினையோ? பணயாரம் வேண்டினையோ? சோலைப் பசுங்கிளியே! சுந்தரமே! சொல்லி அழு. |
309 | | சப்பாணி கொட்டித் தளர்ந்தனையோ? அல்லதுன்றன் கைப்பாவைக் காக்க கலங்கி அழுதனையோ? |
310 | | தித்திக்கும் தேனும் தினைமாவும் கொண்டுன்றன், அத்தை வருவாள்; அழ வேண்டாம்; கண்மணியே! | |
|
|