| முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 47 |
Untitled Document
| 295 | | பூமாலை வாடும், மணம் பொன் மாலைக் கில்லையென்று, பாமாலை வைத்தீசன் பாதம் பணிபவனோ? |
| 296 | | பாலமுதம் உண்டுதமிழ்ப் பாமாலை பாடி, இந்தத் தாலம் புகழவரும் சம்பந்தன் நீதானோ? |
| 297 | | கொன்றையணிந் தம்பலத்தில் கூத்தாடும் ஐயனுக்கு வன்றொண்ட னாக வளர்ந்தவனும் நீதானோ? |
| 298 | | கல்லைப் பிசைந்து கனியாக்குஞ் செந்தமிழின் சொல்லை மணியாகத் தொடுத்தவனும் நீதானோ? |
| 299 | | பூவில் அயனும், இந்தப் பூமீது வள்ளுவர்தம் பாவின் நயம் உணரப் பாலகனாய் வந்தானோ? |
| 300 | | கம்பன் கவியின் களியமுதம் உண்டிட, மால் அம்புவியில் வந்திங்கு அவதாரம் செய்தானோ? |
| 301 | | தேவாரப் பாகும், திருவா சகத்தேனும், நாவார உண்ண எம்மான் நம்மகவாய் வந்தானோ? |
| 302 | | ஆக்கம் பெருக, அறம்வளர, நாட்டையெலாம் காக்கும் பெருமான் கருணைத் திருவுருவோ? | |
|
|