Untitled Document
| 287 | | தேனே! பாலே! முத்தந் தா, தெவிட்டாக் கனியே! முத்தந் தா; மானே! மயிலே! முத்தந் தா, மடியில் வந்து முத்தந் தா. |
| 288 | | ஆராரோ? ஆராரோ? ஆரிவரோ? ஆராரோ? |
| 289 | | மாமணியோ? முத்தோ? மரகதமோ? மன்னவர்தம், தாம முடிமீது தயங்கும் வயிரமதோ? |
| 290 | | முல்லை நறுமலரோ? முருகவிழ்க்குந் தாமரையோ? மல்லிகைப் பூவோ? மருக்கொழுந்தோ? சண்பகமோ? |
| 291 | | தெள்ளமுதம் உண்டு, தெவிட்டாக் கனிஉண்டு, எம் உள்ளங் குளிர உரையாடும் பைங்கிளியோ? |
| 292 | | கற்கண்டு, சீனி, கனியுங் கனிந்தொழுகு சொற்கொண்டு எமக்குச் சுகமளிக்கும் பூங்குயிலோ? |
| 293 | | நெஞ்சிற் கவலையெலாம் நீங்கத் திருமுகத்தில், புஞ்சிரிப்பைக் காட்டி, எம்மை போற்றும் இளமதியோ? |
| 294 | | பல்லக்கில் அம்மான் பவனி வரும்பொழுது, மெல்ல மடியிருந்து விளையாடும் பைங்கிளியோ? | |
|
|