முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 45 |
Untitled Document
279 | | கட்டும் அணையேறிச் சாடி வந்தேன்;-அதன் கண்ணறை தோறும் நுழைந்துவந்தேன்; திட்டத் திடர்களும் சுற்றிவந்தேன்-மடைச் சீப்புகள் மோதித் திறந்துவந்தேன். |
280 | | காயும் நிலத்தழல் ஆற்றிவந்தேன்-அதில் கண்குளி ரப்பயிர் கண்டுவந்தேன்! ஆயும் மலர்ப்பொழில் செய்துவந்தேன்-அங்கென் ஆசை தீரவிளை யாடிவந்தேன். |
281 | | ஏறாத மேடுகள் ஏறிவந்தேன்-பல ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன்; ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன்-மணல் ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன். |
282 | | ஆயிரம் காலால் நடந்துவந்தேன்-நன்செய் அத்தனையும் சுற்றிப் பார்த்துவந்தேன்; நேயமுறுப் புன்செய்க் காட்டிலும்-அங்கங்கு நீரை இறைத்து நெடுகவந்தேன். |
283 | | பஞ்சை அரைத்துநூல் நூற்றுவந்தேன்-சீனி பாகமாய்ச் செய்து கொடு்த்துவந்தேன்; நெஞ்சம் உலர்ந்த நெடுநகரில்-குழாய் நீராகவும் சென்று பாய்ந்து வந்தேன். |
284 | | மாங்கனி தேங்கனி வாரிவந்தேன்-நல்ல வாச மலர்களும் அள்ளிவந்தேன்; தீங்கரும் பாயிரம் தள்ளிவந்தேன்-மிகத் தேனும் தினையுமே சேர்த்துவந்தேன். |
285 | | அல்லும் பகலும் அலைந்துவந்தேன்-எங்கள் ஆழி இறைவனைக் காணவந்தேன்; நில்லும் எனக்கினி நேரமில்லை-இன்னும் நீண்ட வழிபோக வேண்டும் அம்மா! |
| | 43. முத்தந் தா | 286 | | கண்ணே! மணியே! முத்தந் தா, கட்டிக் கரும்பே! முத்தந் தா; வண்ணக் கிளியே! முத்தந் தா, வாசக் கொழுந்தே! முத்தந் தா. | |
|
|