| 1119-20 | சருவம் .... சிரட்டை - பாத்திர வகைகள் |
| குட்டுவம் - தண்ணீர் விட்டு வைத்திருப்பதற்காகப் பயன்படும் பெரிய பாத்திரம் |
| கொப்பரை; பிடியோடு கூடிய பெரிய பாத்திரம் |
| குழியல் - உணவு உண்பதற்குப் பயன்படும் பாத்திரம் |
| உப்போடு - உப்பு வைக்க உதவும் மரப் பாத்திரம்; உப்பு மரவை எனவும் படும் |
| சிரட்டை - கொட்டாங்க ச்சி (Coconut Shell) |
| அற்பமான பொருட்கள் வரை நீதிமன்றம் விட்டுவைக்காது என்பது இங்கு குறிக்கப்படுகிறது |
| 1125 | கட்சிக் கொடை-கிராமங்களில்,மக்களில் சிலர் பணம் போட்டு நடத்தும் நாட்டார் தெய்வவிழா |
| 1126 | மாடன் கொண்டாடி -சுடலைமாடன் என்னும் தெய்வத்திற்கு அருள்வந்து ஆடுபவன் |
| 1128 | பூவை எடுத்தல்-விழா நிகழும் நாட்டார் தெய்வத்தின் அருள் வந்து சாமியாடுபவரின் செய்கையில் பூ எடுத்தல் முக்கியமானநிகழ்ச்சி |
| 1129 | வாறண்டுக்காரன் - ஆளைக் கட்டுப் படுத்திப் பிடிக்க அரசாங்கத்தாரின் கட்டளையைக் கொண்டுவருபவன்(Warrant) |
| 1130 | குட்டிச்சுவர் - கட்டையான சுவர் |
| 1132 | ஓச்சன் குளம்-உவச்சன் குளம்; உவச்சன் ஒரு சாதிப் பெயர்; காளி கோவிலில் பூசை செய்கின்ற இச்சாதியினர் கம்பர், பாரி சைவர் எனவும் படுவர். இச்சாதியின் பெயரால் அழகிய பாண்டியபுரம் வீரபத்திர அம்மன் கோவிலின் எதிரே ஒரு குளம் உள்ளது. |
| 1133 | மடை - குளத்துக்கு நீர்வரும் வழி |
| 1134 | சாமி சுடலைச் சாம்பலாடி - சுடலைமாடன் கோவில் விழாவில், சாமியாடி சுடுகாட்டுக்குச்சென்று,சுடுகாட்டுக் குழியில் இறங்கிச் சாம்பலைப் பூசி வரும் என்பது வழக்கு. |
| 1141 | மடக்கிவிட்டதும் - சாமியாடியை வாறண்டுக்காரன் பிடிக்காமல் திரும்பிப் போகச் செய்ததும். |
| 1144 | தேடினமுதல் - உழைத்துச் சம்பாதித்த சொத்து |
| 1147 | ஆஆ என்று அலைஆமீன் - அமீனா |
| 1151-64 | வழக்குரைஞர் பற்றிய வர்ணனை |
| 1165-71 | வழக்குரைஞரின் குமஸ்தா பற்றிய கிண்டல் |