பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு537

Untitled Document
வைத்த நினைவை யல்லாம் - பிற
     வாஞ்சை யுண்டோ? வயதங் ஙனமேஇரு
பத்திரண் டாமளவும் - வெள்ளை
     பண்மகள் காதலைப் பற்றி நின்றேன், அம்மா.


     என்ற கவிதையை      அறியாதவர்கள் இருக்கமாட்டார்கள். இக்
கவிதையிற் கூறியுள்ளது தே.வி.  அவர்களைப் பற்றிய அளவில் முற்றும்
உண்மை, உண்மை. ஆனால்,     இருபத்திரண்டு வயதளவு மட்டுமல்ல;
இன்றுவரை அப்படித்தான். ஸ்ரீ தே.வி. அவர்கள் நீடூழி வாழ்ந்து கவிதா
உபசரணையில் உயிர்      தளிர்ந்து நின்று தமிழன்னைக்குத் தொண்டு
புரியுமாறு இறைவன் அருள் புரிக.

     உண்மைக் கவிதை இன்பத்தைத் தமிழ் மக்களுக்கு ஊட்டி இச்சிறு
வெளியீடு நீடுநிலவும் என்று உறுதியாய் நம்புகிறேன்.