பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு569

Untitled Document
  வானோர் நாஞ்சில் நாட்டில்வாழ
     வண்மைப் புலவா வையத்துத்
தானேர் இல்லாத் தமிழேபோல்
     தழைத்து நீடு வாழுதியே.

             5. அழ. வள்ளியப்பா

தேனொழுகக் கவிபாடும்
     தேசிக விநாயகமே!
நானுனது கவிபாடி
     நாடோறு மகிழுவனே!

         6. முதுபெரும் புலவர் சதாசிவம்

என்னுள் நிறைந்தென் இதயத்தே வீற்றிருக்கும்
     கண்ணுள் மணியாம் கவிமணியின் நண்ணுபதம்
பேணிக்கை கூப்பப் பெரிதுவந் தென் முன்னே
     காணும் வகை நிற்கும் காத்து (கை.எ.பி.)