பக்கம் எண் :

76கவிமணியின் கவிதைகள்

Untitled Document
474 கால்முடம் நீக்கிடுவான் - குருட்டுக்
     கண்களும் காணவைப்பான்;
சாலப் பெருநோயும் - கையால்
     தடவிப் போக்கிடுவான்.

475 தேச விவகாரம் - அவனும்
     செவியிற் கொள்வதில்லை;
காசு பணத்தை அவன் - என்றுமே
     கைகளால் தொட்டதில்லை.

476 பக்கத்தில் உள்ளவர்கள் - தேச
     பக்தர் புரோகிதர்கள்
மிக்க பழிசுமத்தி - அவனுளம்
     வெந்திடச் செய்து விட்டார்

477 "யூதரின் மன்னவன்யான் - எனவந்து
     ஓதுகின்றான்; இவனை
நீதிசெய் வீர்" எனவே - மன்றத்தில்
     நிறுத்தி வழக்காடினார்.

478 ஏசுவி னைச்சிலுவை - மரத்தில்
     ஏற்றிக் கொல்வதென்றே
நாசகா லர்கூடி - விதியங்கே
     நாட்டி விட்டார் ஐயோ!

479 "மன்னுயிர் காத்திடவே - இங்கு
     வந்து பிறந்தமகன்
தன்னுயிர் காக்கவெண்ணாது - இன்று
     தயங்கி நிற்கின்றான்!

480 முழக்கம் செய்துவந்தான் - வழக்கை
     முடித்து நிற்கின்றான்;
ஒழுக்கம் காட்டவந்தான் - இங்கே
     உயர்வு பெற்றுவிட்டான்!"

481 என்று பற்பலரும் - அவனை
     ஏளனம் செய்து நின்றார்;
ஒன்று உரையாமல் - உரவோன்
     உள்ளம் அடங்கிநின்றான்.