முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 77 |
Untitled Document 482 | | "யாதும் அறியாதார் - அவர்பிழை யாவும் பொறுத்திடுவாய்; நாதனே! என்றீசன் - அருளை நயந்து வேண்டிநின்றான். |
483 | | விண்ணையே நோக்கி நின்றான் - எதனை வேண்டி நின்றனனோ? எண்ணிய எண்ணமெல்லாம் - இங்கே யாவர் அறிவர் அம்மா! |
484 | | "உண்ணையே நம்பி நின்றேன் - உதவிக்கு ஒருவரை யும்காணேன்; என்னைக்கை விட்டனையோ? - ஈசா!" என்று வருந்தி நின்றான். |
485 | | தெய்வ உதவியெதும் - அந்நாள் தெரிய வந்த தில்லை செய்த விண்ணப்பமெல்லாம் - வீணாய் சிதைந்து போனதையோ. |
486 | | சரணம் நீ யென்றே - தலையைத் தாழ்ந்து நின்றதலால், மரண வேளையிலும் - ஈசனை மறந்த தில்லை அவன். |
487 | | ஆவி பெற்றனனோ? இன்றும் அம்புவி வாழ்பவனோ? யாவர் அறிந்திடுவார் - அறியினும் யாவரே கூறவல்லார் |
| | உள்ளமும், உணர்வும் (6) | | | 66. புல் | 489 | | பசும்புல் என்பெயர்; பட்டபா டெல்லாம் ஒருபெரும் கதையாம்; உரைப்பதும் எளிதோ? விரிவிடம் படுமொரு வீட்டின் முன்றிலில் வளர்ந்தேன். அங்குள மனிதரோ கொடியர்; | |
|
|