முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 89 |
Untitled Document
558 | | வஞ்சம் சூதில்லை - ஈசன் வகுத்த வழியன்றி, நெஞ்சம் என்றுமே - வேறு நெறியிற் செல்வதில்லை. |
558(அ) | | உள்ள துள்ளபடி - பேசி உலகில் வாழ்ந்திடலாம் கள்ளம் கபடுகள் - இன்றிக் காலம் போக்கிடலாம் |
559 | | புவியிற் பசுவெல்லாம் - உணவு பொறுக்கி உண்டிடலாம்; கவலை யற்றிரவில் நன்றாய்க் கண்ணுறங் கிடலாம். |
560 | | கனி கனிந்துதிரும் - சோலை கண்டு தங்கிடலாம்; இனிய கீதங்கள் - பாடி என்றும் வாழ்ந்திடலாம். |
561 | | பகுத்தறி வெதற்கோ? - பறவை படைத்த நாள்ஈசன் வகுத்தளித் திருக்கம் - இயற்கை வாசனை போதாதோ? |
562 | | தேரும் பொதுவுடைமை - ருஷிய தேசத்தி லுள்ளதெல்லாம், பாரில் பறவைகளைக் - கண்டு படித்த பாடமேயாம். |
563 | | நமனை எண்ணியெண்ணி - உள்ளம் நடுந டுங்கிடாமல், அமைதி கண்டிடலாம் நித்ய ஆனந்தம் பெற்றிடலாம். |
| | 73. தாய் கண்ட கனவு | 564 | | தங்கஒளி தந்தாய் - இன்று சாம்ப லாகி நின்றாய் | |
|
|