பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு89

Untitled Document
558 வஞ்சம் சூதில்லை - ஈசன்
     வகுத்த வழியன்றி,
நெஞ்சம் என்றுமே - வேறு
     நெறியிற் செல்வதில்லை.

558(அ) உள்ள துள்ளபடி - பேசி
     உலகில் வாழ்ந்திடலாம்
கள்ளம் கபடுகள் - இன்றிக்
     காலம் போக்கிடலாம்

559 புவியிற் பசுவெல்லாம் - உணவு
     பொறுக்கி உண்டிடலாம்;
கவலை யற்றிரவில் நன்றாய்க்
     கண்ணுறங் கிடலாம்.

560 கனி கனிந்துதிரும் - சோலை
     கண்டு தங்கிடலாம்;
இனிய கீதங்கள் - பாடி
     என்றும் வாழ்ந்திடலாம்.

561 பகுத்தறி வெதற்கோ? - பறவை
     படைத்த நாள்ஈசன்
வகுத்தளித் திருக்கம் - இயற்கை
     வாசனை போதாதோ?

562 தேரும் பொதுவுடைமை - ருஷிய
     தேசத்தி லுள்ளதெல்லாம்,
பாரில் பறவைகளைக் - கண்டு
     படித்த பாடமேயாம்.

563 நமனை எண்ணியெண்ணி - உள்ளம்
     நடுந டுங்கிடாமல்,
அமைதி கண்டிடலாம் நித்ய
     ஆனந்தம் பெற்றிடலாம்.

73. தாய் கண்ட கனவு
564 தங்கஒளி தந்தாய் - இன்று
     சாம்ப லாகி நின்றாய்