பக்கம் எண் :

என் நாசியால்
சந்தனத்தையும் சவ்வாதையும்
மோந்து மகிழ்ந்திருக்கிறேன்.

சண்பகத்தையும் மல்லிகையையும்
மோந்து சுவைத்திருக்கிறேன்.

இப்போது
உன் வண்ணப் பாதங்களையும்
பாதங்கள் முத்தமிட்ட மண்ணையும்
மோந்து பார்க்கும்
மோகவெறி கொள்கிறேன்.

17