பக்கம் எண் :

ஒரு காலத்தில்
தன் காதலிக்காகத்
தலையைக் கொடுத்தான்
ஒரு கவிஞன்
என்று படித்தபோது
‘இது என்ன மூடத்தனம்’
என்று எண்ணிப்
பரிகசித்தேன்.

இப்போது -
எனக்கு
ஒரே ஒரு தலை தானே இருக்கிறது
என்று நினைத்துப்
பரிதவிக்கிறேன்.

27