பக்கம் எண் :

நீ எனக்குத் தாகவெறி தந்தாய்
பிறகுதான்-
என் இதயம்
வறண்ட நிலமாய்க் கிடந்தது
எனக்குப் புரிந்தது

நீ என்னிடத்தில் பசியைக் கிளறினாய்;
பிறகுதான்-
என் ஆன்மா
ஒட்டிய வயிறாய் இருந்தது
எனக்குப் புரிந்தது.

உன்னால்
இந்தத் தாகம், இந்தப் பசி
நிரந்தரமாகத் தணியும்,

காரணம்
நீ ஆகாய கங்கை!
அமுத சுரபி!

3