நேற்றுவரை ஊரார் என்னைக் ‘கவிஞன்’ என்றார்கள்.
இன்று ‘பித்தன்’ என்கிறார்கள்.
அந்த மேடையில் ஒரு பெரியவர், தெய்வத்தை யாராவது பார்த்ததுண்டா என்று கேட்டார். ‘இதோ’ என்று உன் உருவப் படத்தைக் காட்டினேன்.
அதனால்தான் பித்தன் என்கிறார்கள்;
ஊர் கிடக்கட்டும். கவிஞன், பித்தன் என்று எதையாவது சொல்லும். நீ மட்டும் என்னை என் இனிய ‘காதலன்’ என்று சொல்: போதும்.
37 |
|
|
|