ஒருநாள் உனக்கு அழைப்பு விடுக்கிறேன். நீ என் அறை நோக்கி வருகிறாய்.
“கூப்பிட்டீர்களாமே, என்ன?” என்று கேட்கிறாய். நான் விழிக்கிறேன்.
“ஒன்றுமில்லை” என்கிறேன். “ஒன்றுமில்லாமல் என்னை ஏன் கூப்பிட வேண்டும்?” -உன் பார்வை வினாவாகிறது.
நான் என்ன செய்வது? உன் நினைவைத் தவிர என் உள்ளத்தில் வேறு ‘ஒன்றுமில்லை’ என்று எப்படிச் சொல்வது?
ஓ...இது ஒரு கற்பனைதான்!
40 |
|
|
|