பக்கம் எண் :

ஒருநாள்
உனக்கு அழைப்பு விடுக்கிறேன்.
நீ என் அறை நோக்கி வருகிறாய்.

“கூப்பிட்டீர்களாமே, என்ன?”
என்று கேட்கிறாய்.
நான் விழிக்கிறேன்.

“ஒன்றுமில்லை” என்கிறேன்.
“ஒன்றுமில்லாமல்
என்னை ஏன் கூப்பிட வேண்டும்?”
-உன் பார்வை வினாவாகிறது.

நான் என்ன செய்வது?
உன் நினைவைத் தவிர
என் உள்ளத்தில் வேறு ‘ஒன்றுமில்லை’
என்று எப்படிச் சொல்வது?

ஓ...இது ஒரு கற்பனைதான்!

40