பல நாட்கள் உன் பின்னால் தொடர்ந்து வருகிறேன்- பண்ணையாருக்குப் பின்னால் வரும் கூலிக்காரனைப் போல!
சில நாட்கள் உன் கூடவே வருகிறேன்- பாதத்தில் ஒட்டியிருக்கும் செருப்பைப் போல!
எனினும், நீ உன் வீட்டுக்குள் நுழையும்போது என்னால் பின் தொடர முடியவில்லை; கூட வரமுடியவில்லை.
வாசலில் நின்றவாறு உன் வீட்டையே பார்க்கிறேன்- எல்லையில் நின்றவாறு நாடு கடத்தப்பட்ட ஒரு தேசாபிமானி தன் நாட்டை ஏக்கத்தோடு பார்ப்பதைப் போல!
43 |
|
|
|