பக்கம் எண் :

உன்னைத்தேடி வருகிறேன்.
நீ வைக்கோற் போரில் சாய்ந்தவாறு
கரும்பைக் கடித்துக் கொண்டிருக்கிறாய்.

என் கண்,
மதுவுண்ட வண்டாகிறது.

என்மனம்,
மாங்கொழுந்தைச் சுவைத்த குயிலாகிறது.

என் வாய்,
‘கரும்பே இன்னொரு கரும்பைக் கடிக்கும்
காட்சி இதோ, இதோ’
என்று பாடுகிறது.

42