உன்னைத்தேடி வருகிறேன். நீ வைக்கோற் போரில் சாய்ந்தவாறு கரும்பைக் கடித்துக் கொண்டிருக்கிறாய்.
என் கண், மதுவுண்ட வண்டாகிறது.
என்மனம், மாங்கொழுந்தைச் சுவைத்த குயிலாகிறது.
என் வாய், ‘கரும்பே இன்னொரு கரும்பைக் கடிக்கும் காட்சி இதோ, இதோ’ என்று பாடுகிறது.
42 |
|
|
|