பக்கம் எண் :

நானும் நீயும் உரையாடுகிறோம்;

“நெடுங்கடலில் மூழ்கி
நித்திலங்களை எடுத்துத் தொடுத்து
உனக்கு மாலை சூட்ட விரும்புகிறேன்:
நீ ஏற்றுக் கொள்வாயல்லவா?”

“நீங்கள் பெரிய தீரர்தான்;
ஆனால் அந்த முத்துமாலை எனக்கு வேண்டாம்”

“வானத்தில் ஏறி
விண்மீன்களைக் கொய்துகட்டி
உனக்கு மாலை அணிவிப்பேன்;
அதையாவது ஏற்றுக் கொள்வாயல்லவா?”

“நீங்கள் பெரிய கவிஞர்தான்;
ஆனால் அந்த நட்சத்திரமாலை
எனக்கு வேண்டாம்.”

“ஓ...சாதாரண மலர் மாலையைத்தான்
நீயும் விரும்புகிறாயா?”

“இல்லை... அதுவும் வேண்டாம்.”

“இப்படி எதுவும் வேண்டாமென்று மறுத்தால்
உன் கண்கள் என் கண்ணீரையல்லவா
சந்திக்கக் கூடும்”

“எனக்கு அந்தக்
கண்ணீர் மாலைதான் வேண்டும்”

67