பக்கம் எண் :

நீ தாமதிக்காதே!

தேரோட்டம் முடிந்தபிறகு
திருவிழாக் காணவரும்
ஒரு பக்தனைப் போல்-

வண்டி போன பிறகு
நிலையம் வந்து சேரும்
ஒரு பயணியைப் போல்-

நோயாளி மடிந்த பிறகு
மருந்து வாங்கி வரும்
ஒரு சொந்தக்காரனைப் போல்-

நீ காலங்கழித்து வராதே;
பிறகு வருந்தாதே!

74