முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
நீ தாமதிக்காதே!
தேரோட்டம் முடிந்தபிறகு
திருவிழாக் காணவரும்
ஒரு பக்தனைப் போல்-
வண்டி போன பிறகு
நிலையம் வந்து சேரும்
ஒரு பயணியைப் போல்-
நோயாளி மடிந்த பிறகு
மருந்து வாங்கி வரும்
ஒரு சொந்தக்காரனைப் போல்-
நீ காலங்கழித்து வராதே;
பிறகு வருந்தாதே!
74
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்