பக்கம் எண் :

24.குக்கூ

3

வீணை ஒன்று
விழுந்து கிடந்தது காட்டில் ;
விறகு வெட்டியின்
கண்ணில் பட்டது
வெந்து முடிந்தது வீட்டில்.

4

ஆடி வீதியில்
கடை பரப்பிக்
காலையும் பரப்பி
விற்கிறாள் ஒரு கிழம்
குவியல் குவியலாய்
அழுகல் மாம்பழம்.