பக்கம் எண் :

மீரா.73

101

கிணற்றுச் சுவருள்
ஒட்டி யிருந்தாலும்
வானவெளியில்
கொட்டியிருந்தாலும்
இருள் இருளே !

102

காலையில் பொங்கல்வடை
மாலையில்
கடற்கரைச் சாலையில்
ஒரு தொங்கல் நடை
இவை தவிர
இத்தனை வருடம் இருந்தும்
என்ன கண்டேன் இந்தச்
சென்னை நகரில்.