“எரிந்த கம்பியை-உடன்
எடுத்துச் சென்றுநீ
தெருவின் ஓரமாய்-போட்டுத்
திரும்பி வந்திடு.
நட்ட நடுவிலே-போட்டால்,
நடப்போர் கால்களைச்
சுட்டுப் பொசுக்கிடும்”-எனச்
சொன்னார் தந்தையும்.
எரியும் போதிலே-‘ஓஹோ!‘
என்று புகழ்ந்தனர்.
எரிந்து முடிந்ததும்-அந்தோ,
இந்த நிலைமையா! |