பக்கம் எண் :

                 “எரிந்த கம்பியை-உடன்
                     எடுத்துச் சென்றுநீ
                 
தெருவின் ஓரமாய்-போட்டுத்
                     திரும்பி வந்திடு.

                 
நட்ட நடுவிலே-போட்டால்,
                     நடப்போர் கால்களைச்
                 
சுட்டுப் பொசுக்கிடும்”-எனச்
                     சொன்னார் தந்தையும்.

                 
எரியும் போதிலே-‘ஓஹோ!‘
                     என்று புகழ்ந்தனர்.
                 
எரிந்து முடிந்ததும்-அந்தோ,
                     இந்த நிலைமையா!

 
100