பக்கம் எண் :

                 அன்னை, தந்தை மகிழும் வகையில்
                     கற்று வருகிறோம்-நல்ல
                
அறிஞர் சொன்ன வழியில் நாளும்
                     நிற்க முயல்கிறோம்.
                
உண்மை ஒன்றே கடவுள் என்றே
                     உணர்ந்து வருகிறோம்.
                
உழைத்து நாமும் உயர்வோம் என்றே
                     உறுதி கொள்கிறோம்.

                
ஏழை யென்றும் எளியோ ரென்றும்.
                     எண்ணங் கொண்டிடோம்-நாம்
                
இந்தி யர்கள் அனைவ ருக்கும்
                     சொந்த மாகிறோம்.
                
நாளை இந்த நாட்டை நாமே
                     ஆளப் போகிறோம்-இன்றே
                
நல்ல முறையில் அடித்த ளத்தை
                     அமைத்துக் கொள்ளுவோம்
    

 
106