பக்கம் எண் :

                   சின்னஞ்சிறு வாயைக்கொஞ்சம்
                      திறக்க மாட்டானா?-என்
                  
கண்ணில்இந்த உலகமுழுதும்
                      காட்ட மாட்டானா?

                  
மாடுகன்றைக் காட்டில்ஓட்டி
                      மேய்க்க மாட்டானா?-அங்கே
                  
ஓடிஆட என்னைக்கூட்டுச்
                      சேர்க்க மாட்டானா?

                  
மலைஎடுத்துக் குடையைப்போலப்
                       பிடிக்க மாட்டானா?-என்
                  
தலையில்மழை விழுவதையும்
                       தடுக்க மாட்டானா?

                 
கீதைதன்னைத் திரும்பவுமே
                      கூறமாட்டானா?-அதைக்
                 
காதில்கேட்டுச் சிறந்தவனாய்
                      மாற மாட்டேனா?-நான்
                 
மாற மாட்டேனா?

 
114