இடிமுழக்கம் செய்வதுபோல்
சிறுவர் கூட்டம்
எழுச்சியுடன் பாரதியார்
பாட்டைப் பாட
அரசாங்கச் சேவகர்கள்
அங்கு வந்தார்,
“யார்இதனை நடத்துவது ?
சொல்க” என்றார்.
“ஊர்மக்கள் நடத்துகிறோம்
ஒன்று கூடி.
உயர்கவியைப் போற்றுகிறோம்
பாட்டுப்
பாடி”
என்றதுமே அவர்எதுவும்
கூற வில்லை.
எங்களுடன் அவர்களுமே
நடந்து வந்தார்.
பாரதிக்குச் சிலர்தேங்காய்
உடைக்க லானார்.
பக்தியுடன் சூடத்தைக்
கொளுத்த லானார்.
கைகூப்பி வழியெல்லாம்
வணங்க லானார்.
கடவு ளைப்போல் மாகவியைக்
கருத லானார். |