பக்கம் எண் :

                 “பாரதத்தாய் நலமுடனே
                   
வாழ்க ! வாழ்க !
                  பாரதியார் புகழ்வாழ்க !
                  
 வாழ்க !” என்றே

                  குழந்தைகளும் பெரியோரும்
                    
கூடி ஒன்றாய்க்
                  குரல்எழுப்பி, உணர்ச்சியுடன்
                    
முழங்கும் போது,

                 “பாரதத்தாய் நலமுடனே
                    
வாழ்க ! வாழ்க !
                  பாரதியார் புகழ்என்றும்
                    
வாழ்க ! வாழ்க !”

                  எனஅந்தச் சேவகரும்
                    
உணர்ச்சி யோடே
                  எங்களுடன் வாய்விட்டுப்
                    
பாட லானார்.

                 ‘இந்தியரே நாமும்’ என
                    
அந்த நேரம்
                 எண்ணியதால் தமைமறந்து
                    
பாடி னாரே !

 
128