பக்கம் எண் :

           பொன்னைவிட உயர்ந்தது ?


                  
 ‘பொன்னை விட உயர்ந்தது
                        என்ன?’ என்ற கேள்வியை
                    
சின்ன வயதில் காந்தியும்
                        தேர்வுத் தாளில் கண்டனர்.

                    
‘பொன்னை விட உயர்ந்தது
                        உண்மை, உண்மை, உண்மைதான்’
                    
என்ற பதிலை காந்தியும்
                        எழுதி னாரே மகிழ்வுடன்.

                   
 சின்ன வயதில் உண்மையின்
                        சிறப்பை உணர்ந்த காந்திதான்
                    
பின்னர் உலகில் மிகமிகப்
                        பெரிய மனிதர் ஆயினார் !

 
131