முட்டு கின்ற மூச்சுடன்
குட்டி மான்போல் ஓடினேன்.
எட்டி டாத தொலைவிலே
ஏய்த்துப் பறந்து சென்றதே !
பட்ட ணத்தை நோக்கிஎன்
பட்டம் பறந்து செல்லுமே.
எட்டு மாடி உள்ளதோர்
கட்ட டத்தில் இறங்குமே !
பட்ட ணத்தில் உள்ளவர்
பலரும் இதனைக் காணுவர்;
வட்ட மாகக் கூடுவர்;
மகிழ்ச்சி யோடு நெருங்குவர்.
பட்டம் நடுவே பெரியதாய்க்
கொட்டை எழுத்தில் என்பெயர்
‘கிட்டு’ என்றே தெரிந்திடும்.
கீர்த்தி அதனால் பெருகிடும் ! |