பக்கம் எண் :

                   முட்டு கின்ற மூச்சுடன்
                      குட்டி மான்போல் ஓடினேன்.
                  
எட்டி டாத தொலைவிலே
                      ஏய்த்துப் பறந்து சென்றதே !
 
                  
பட்ட ணத்தை நோக்கிஎன்
                      பட்டம் பறந்து செல்லுமே.
                 
 எட்டு மாடி உள்ளதோர்
                      கட்ட டத்தில் இறங்குமே !

                  
பட்ட ணத்தில் உள்ளவர்
                      பலரும் இதனைக் காணுவர்;
                  
வட்ட மாகக் கூடுவர்;
                      மகிழ்ச்சி யோடு நெருங்குவர்.

                 
 பட்டம் நடுவே பெரியதாய்க்
                     கொட்டை எழுத்தில் என்பெயர்
                 
‘கிட்டு’ என்றே தெரிந்திடும்.
                      கீர்த்தி அதனால் பெருகிடும் !

 
136