பக்கம் எண் :

 வாழைப் பழத்தின்


மகிழ்ச்சி



               
ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு
                  
அவற்றுடன் என்னை வைத்தார்கள்.
                ‘சாப்பிடு வீர்’ என வந்தவர்முன்
                   
தட்டில் வைத்துக் கொடுத்தார்கள்.

                வந்தவர் மிகவும் பணக்காரர்.
                 
“வயிற்றில் இல்லை இடம்” என்றார்.
                “இந்தப் பைக்குள் வைக்கின்றோம்,
                 
 எடுத்துக் காரில் சென்றிடலாம்.”

                 என்றதும் பையுடன் பணக்காரர்
                   
ஏறினர் தமது காரினிலே.
                 சென்றிடும் வழியில் திராட்சையுடன்
                   
தின்றனர் ஆப்பிள், ஆரஞ்சை.

 
137