‘வாழைப் பழத்தை என்னுடைய
வாழ்க்கையில் தின்றதே இல்லை. இது
ஏழைகள் தின்னும் பழம்’ என்றே
எறிந்தார் என்னைச் சாலையிலே.
காலையில் இருந்து மாலைவரை
கடும்பசி யாலே துடிதுடித்துச்
சாலையில் நின்ற ஒருசிறுவன்
சட்டென என்னைப் பிடித்தானே !
ஏழைச் சிறுவன் பசிதீர்த்தே
இன்பம் மிகமிக நான்பெறுவேன்.
வாழை மரமாம் என் அம்மா
மனசு குளிரச் செய்வேனே! |