நாயும் நிலவும்
வட்ட மான வெண்ணி லாவைப்
பார்த்துப் பார்த்துமே
வள்வள் ளென்று எங்கள் வீட்டு
நாய் குரைத்தது.
கிட்டச் சென்றே என்ன சொல்லிக்
குரைக்கு தென்றுநான்
கேட்டு வந்தேன்; அந்தச் செய்தி
கூறப் போகிறேன்:
நிலாவிடம் நாய் சொன்னது:
அமா வாசை இருட்டிலே
ஆகா யத்தில் தேடினேன்.
எங்கே போனாய்? நிலவேநீ
எவரைக் கண்டே அஞ்சினாய்?
அமா வாசை நாளிலே
அண்டங் காக்கை இருளிலே
திருட்டு முனியன் பூனைபோல்
தெருவில் நடந்து வந்தனன். |