பக்கம் எண் :

 நாயும் நிலவும்


                
 வட்ட மான வெண்ணி லாவைப்
                     பார்த்துப் பார்த்துமே
                 
வள்வள் ளென்று எங்கள் வீட்டு
                     நாய் குரைத்தது.
                 
கிட்டச் சென்றே என்ன சொல்லிக்
                     குரைக்கு தென்றுநான்
                 
கேட்டு வந்தேன்; அந்தச் செய்தி
                     கூறப் போகிறேன்:

நிலாவிடம் நாய் சொன்னது:

                 
அமா வாசை இருட்டிலே
                  ஆகா யத்தில் தேடினேன்.


                  எங்கே போனாய்? நிலவேநீ
                  எவரைக் கண்டே அஞ்சினாய்?

                
 அமா வாசை நாளிலே
                
 அண்டங் காக்கை இருளிலே

                  திருட்டு முனியன் பூனைபோல்
                  தெருவில் நடந்து வந்தனன்.

 
139