பக்கம் எண் :

              காந்தித் தாத்தா வரலாற்றைக்
              கருத்துடன் இன்று படிக்கையிலே,

             
உண்மை ஒன்றே இவ்வுலகில்
              உயர்ந்தது, மிகவும் உயர்ந்ததென


              உணர்ந்தேன். இனிமேல் எப்பொழுதும்
              உத்தமர் காந்தி வழிநடப்பேன்.

             
சோதனை பற்பல தோன்றிடினும்,
              தொல்லைகள் தொடர்ந்து வந்திடினும்


              உண்மை ஒன்றே பேசிடுவேன்.
              உறுதி, உறுதி, உறுதி இது !

 

 
143