கவனக் குறைவால் நானுமே
கண்ணா டியை உடைத்தபின்
தவறு தங்கை செய்ததாய்த்
தந்தை யிடத்தில் கூறுவேன்.
எனக்குப் படிப்பில் போட்டியாய்
இருக்கும் கோபு, முரளியின்
கணக்கைக் காப்பி அடித்ததாய்க்
கதையும் கட்டி விடுகிறேன்.
அன்னை தூங்கும் வேளையில்
ஆசை யாக லட்டையே
தின்று விட்டு யார்அந்தத்
திருடன் என்று தேடுவேன்.
ஃ ஃ
ஃ
தினம் தினம் இப்படி நான்சொன்ன
சிறுசிறு பொய்கள் எத்தனையோ?
கணக்கே இல்லை. இதற்கெல்லாம்
காரணம் என்ன? நானறிவேன்.
பெருமைக் காகப் பொய்சொன்னேன்.
பிறரை ஏய்க்கப்
பொய்சொன்னேன்.
அடிக்குப் பயந்து பொய்சொன்னேன்.
ஆத்திரத் தாலே பொய்சொன்னேன்.
ஆசையி னாலும் பொய்சொன்னேன்.
ஐயோ! தினமும்
பொய்சொன்னேன்.
ஃ ஃ
ஃ
இப்படித் தினம்தினம் பொய்சொன்னால்
எவர்தான் என்னை நம்பிடுவார்?
தப்பிதம் அன்றோ? இதைநானும்
சரியாய் உணர்ந்தேன். எப்பொழுது?
|