பக்கம் எண் :

              மடித்துக் காலை வைக்காமல்
              வாயிற் படியில் இறங்கியதால்

             
அடுத்த நிமிடம் தடதடென
              அங்கே சத்தம் கேட்டதுவே.


              உருண்டு விழுந்தது நாற்காலி !
              ஒடிந்தன மூன்று கால்களுமே !

             
மிச்சம் ஒற்றைக் காலுடனே
              முடமாய்க் கிடந்தது நாற்காலி.


              நடக்கும் முன்னே நாற்காலி.
              நடந்த பிறகோ ஒருகாலி !

             
இருந்த இடத்தில் இருந்திருந்தால்
              இன்னும் அதன்பெயர் நாற்காலி !

 
145