மடித்துக் காலை வைக்காமல்
வாயிற் படியில் இறங்கியதால்
அடுத்த நிமிடம் தடதடென
அங்கே சத்தம் கேட்டதுவே.
உருண்டு விழுந்தது நாற்காலி !
ஒடிந்தன மூன்று கால்களுமே !
மிச்சம் ஒற்றைக் காலுடனே
முடமாய்க்
கிடந்தது நாற்காலி.
நடக்கும் முன்னே நாற்காலி.
நடந்த பிறகோ ஒருகாலி !
இருந்த இடத்தில் இருந்திருந்தால்
இன்னும் அதன்பெயர் நாற்காலி ! |