பக்கம் எண் :

                  தடியை ஊன்றி ஊன்றியே
                    
தன்னந் தனியாய்ப் பாட்டியும்
                  நடந்து நடந்து சென்றனள்;
                    
நான்கு தெருவைக் கடந்தனள்.

                  மாவு அரைக்கும் ஓரிடம்
                   
 வந்த பிறகே நின்றனள்.
                  ஆவ லாக நுழைந்தனள்;
                   
“அரைத்துக் கொடுப்பீர்” என்றனள்.

                  உருண்டைச் சீடை யாவுமே
                    
உடைந்து நொறுங்கிக் கடைசியில்
                  அருமை மாவாய் மாறின.
                  
  ஆஹா ! பாட்டி மகிழ்ந்தனள்.

                  வீடு வந்து சேர்ந்தனள்
                    
வேக மாகப் பாட்டியும்.
                  சீடை மாவில் நெய்யுடன்
                   
 சீனி சேர்த்துப் பிசைந்தனள்.

                  தின்னப் போகும் வேளையில்
                    
சேர்ந்து பேரப் பிள்ளைகள்
                  முன்னே வந்து நின்றனர்.
                   
 “என்ன பாட்டி?” என்றனர்.

                  பாட்டி சீடை மாவினைப்
                     
பத்துப் பேரப் பிள்ளைக்கும்
                  ஊட்டி ஊட்டி விட்டனள்;
                     
ஒருவாய் அவளும் உண்டனள் !

 
150