சிறகை அடித்துக் கொண்டன;
சீறித் தாவிக் கொத்தின;
குரலைக் காட்டி வேகமாய்க்
கோபத் தோடு கூவின.
அம்மாக் கோழி குரலுமே
அந்தச் சமயம் கேட்கவே,
வம்புச் சண்டை நிறுத்தின.
மனத்தைக் கட்டுப் படுத்தின.
சண்டை ஓய்ந்து போனதும்
தரையைக் கூர்ந்து நோக்கின.
கண்ணில் அந்தப் புழுவையே
காண வில்லை; இல்லையே !
சண்டை முடியும் வரையிலும்
சாவ தற்கு நிற்குமோ ?
மண்டு அல்ல அப்புழு.
மகிழ்ந்து தப்பி விட்டதே! |