பக்கம் எண் :

               சிறகை அடித்துக் கொண்டன;
                  சீறித் தாவிக் கொத்தின;
              
குரலைக் காட்டி வேகமாய்க்
                  கோபத் தோடு கூவின.

              
அம்மாக் கோழி குரலுமே
                  அந்தச் சமயம் கேட்கவே,
             
 வம்புச் சண்டை நிறுத்தின.
                   மனத்தைக் கட்டுப் படுத்தின.

              
சண்டை ஓய்ந்து போனதும்
                   தரையைக் கூர்ந்து நோக்கின.
              
கண்ணில் அந்தப் புழுவையே
                   காண வில்லை; இல்லையே !

              
சண்டை முடியும் வரையிலும்
                   சாவ தற்கு நிற்குமோ ?
             
 மண்டு அல்ல அப்புழு.
                   மகிழ்ந்து தப்பி விட்டதே!

 
152