பக்கம் எண் :

          கடலும் மழைத்துளிகளும்


கடல் :


               
மழைத் துளிகாள், மழைத் துளிகாள்,
                  
என்னி டத்திலே
                வந்து நீங்கள் சேர்ந்த தாலே
                  
மகிமை பெறுகிறீர்.

                அழகு, ஆழம், அகலம், நீளம்
                  
என்னைப் போலவே
                யாரி டத்தில் உண்டு? நீங்கள்
                  
கூற முடியுமோ?
 

மழைத் துளிகள்:


              
 ஆறு, ஏரி, குளங்க ளெல்லாம்
                  
அளவில் சிறியவை.
                ஆன போதும் அவற்றில் சேர்ந்தால்
                  
அதிகம் மகிழுவோம்.

                ஊரில் உள்ளோர் தாகம் தீர
                   
உதவி செய்யலாம்.
                உப்புக் கரிக்கு தென்று சொல்லித்
                   
துப்பு வார்களோ?

 
159